மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


டிசம்பர் 21

மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பு இன்று தில்லியில் சாகித்ய அகாடமியில் நடந்தது. மறைந்த எழுத்தாளர் இன்குலாப்பின், காந்தள்நாட்கள் என்ற கவிதை தொகுதிக்கும் விருது வழங்கப்படுகிறது. கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழிப்பெயர்ப்புக்காக யூமாவாசுகிக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ. சாகுல் அமீது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையிலும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு, தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடக்கக் காலத்தில் திமுக ஆதரவாளராக பொதுப்பணியாற்றியவர், கீழ்வெண்மணி சம்பவத்திற்கு பிறகு மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

இன்குலாப் கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 12 கவிதை தொகுதிகளும், ஒரு சிறுகதை தொகுப்பு, இரண்டு கட்டுரை தொகுப்புகள், 6 நாடக தொகுப்புகளும் ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார். 2017-ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய ‛ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற தொகுதி வெளியானது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2016ல் இவர் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாக இருந்தார். ஆனால், கடைசிநேரத்தில் வண்ணதாசன் பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இன்குலாப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் காலமான ஒருவருக்கு விருது வழங்கலாமா என சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், கண்ணதாசன் போன்றோருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு சாகித்யஅகாடமி வழங்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...