வரும் 29-ம் தேதி கோவை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

டிசம்பர் 21

தமிழக அரசியலில் விரைவில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வரும் 26-ம் தேதி முதல் ரசிகர்களை சந்திக்க உள்ளார். கோவை மாவட்ட ரசிகர்களை 29-ம் தேதி சந்தித்து பேசுகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 15 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அப்போது அவர் சந்தித்தார். விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் 2.0, காலா படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் ரசிகர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது, அந்தப் படங்களை முடித்து விட்டதால் மீண்டும் ரசிகர்கள் சந்திப்புக்கு தயாராகி உள்ளார். வருகிற 26-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை 6 நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

எந்தத் தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

26-ந் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். 27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

28-ந் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 29-ந் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 30-ந் தேதி மற்றும் 31-ந் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சால்வை, மாலைகள் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தோளில் கைபோடக்கூடாது, கையைப் பிடித்து குலுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...