வரும் 29-ம் தேதி கோவை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

டிசம்பர் 21

தமிழக அரசியலில் விரைவில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வரும் 26-ம் தேதி முதல் ரசிகர்களை சந்திக்க உள்ளார். கோவை மாவட்ட ரசிகர்களை 29-ம் தேதி சந்தித்து பேசுகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 15 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அப்போது அவர் சந்தித்தார். விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் 2.0, காலா படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் ரசிகர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது, அந்தப் படங்களை முடித்து விட்டதால் மீண்டும் ரசிகர்கள் சந்திப்புக்கு தயாராகி உள்ளார். வருகிற 26-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை 6 நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

எந்தத் தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

26-ந் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். 27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

28-ந் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 29-ந் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 30-ந் தேதி மற்றும் 31-ந் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சால்வை, மாலைகள் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தோளில் கைபோடக்கூடாது, கையைப் பிடித்து குலுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...