ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் : 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து பொங்கலூர் பழனிசாமி கருத்து

கோவை, டிசம்பர் 21

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி தனது கருத்து கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு காலதாமதமானது என்றாலும், வரவேற்கத்தக்கது. சில அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் சூழ்ச்சியினால், திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதன் தாக்கம் கடந்த தேர்தல்களில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த போதும், 2 கோடி திமுக தொண்டர்கள் கட்சிக்கு உறுதுணையாகவே இருந்தனர். 

தமிழக மக்களுக்கு பிடித்தமான திராவிட அமைப்பு என்றால் திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கினால் ஏற்பட்ட குழப்பத்தால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவிற்கு வாக்கு அதிகரித்தது. தற்போது, திமுக மீதான அவப்பெயர் நீங்கியிருப்பதால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும். உள்ளாட்சித் தேர்தல் என இனி வரும் அனைத்துத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...