2ஜி வழக்கில் முறையான விசாரணை வேண்டி மத்திய அரசுக்கு சு.சுவாமி கோரிக்கை


டிசம்பர் 21

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு என்ற தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டதாக ஆ. ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இந்த வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி அறிவித்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...