கோவை, டிசம்பர் 21
2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து கோவையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருலுகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் ஏ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, வாக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, நீதிமன்ற வளாகத்தில் திரண்ட திமுக வழக்கறிஞர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் நாச்சி முத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து கோவையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருலுகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் ஏ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, வாக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, நீதிமன்ற வளாகத்தில் திரண்ட திமுக வழக்கறிஞர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் நாச்சி முத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.