2ஜி வழக்கு: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி ஆஜர்

டிசம்பர் 21

2ஜி வழக்கில் இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் ஆஜராகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக-வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சிபிஐ இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தற்போது தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

இந்நிலையில் நீதிமன்ற வளாகம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...