2ஜி வழக்கு: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி ஆஜர்

டிசம்பர் 21

2ஜி வழக்கில் இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் ஆஜராகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக-வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சிபிஐ இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தற்போது தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

இந்நிலையில் நீதிமன்ற வளாகம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...