கோவையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ரயில் கொள்ளையிலும் தொடர்பா? : சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோவை, டிசம்பர் 20

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலுக்கு சேலத்தில் நடைபெற்ற ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 10-ம் தேதி அடுத்தடுத்து அமைந்த 3 ஏ.டி.எம். மையங்களில் புகுந்த வட மாநில கொள்ளையர்கள் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 8 பேரை நாமக்கல் மற்றும் சேலம் மாநகர போலீசார் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்று  சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

5 கோடி கொள்ளை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் இருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

தற்போது ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 8 வட மாநில வாலிபர்களும் இதே போல் கியாஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டே கொள்ளையடித்துள்ளனர். 

இதனால், ரயில் கொள்ளை வழக்கில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி முடிவு செய்தனர். 

அதன்படி, இன்று கோவை வந்த அவர்கள் கைதான வடமாநில கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...