கோவையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ரயில் கொள்ளையிலும் தொடர்பா? : சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோவை, டிசம்பர் 20

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலுக்கு சேலத்தில் நடைபெற்ற ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 10-ம் தேதி அடுத்தடுத்து அமைந்த 3 ஏ.டி.எம். மையங்களில் புகுந்த வட மாநில கொள்ளையர்கள் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 8 பேரை நாமக்கல் மற்றும் சேலம் மாநகர போலீசார் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்று  சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

5 கோடி கொள்ளை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் இருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

தற்போது ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 8 வட மாநில வாலிபர்களும் இதே போல் கியாஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டே கொள்ளையடித்துள்ளனர். 

இதனால், ரயில் கொள்ளை வழக்கில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி முடிவு செய்தனர். 

அதன்படி, இன்று கோவை வந்த அவர்கள் கைதான வடமாநில கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...