ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - தமிழகத்திற்கு ரூ.4047 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கோரிக்கை

டிசம்பர் 19

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று பகல் 2:20 மணியளவில் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 4,047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...