டிசம்பர் 16
சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள டிடிவி தினகரனை தகுதிநீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்.கே. நகரில் ரூ.1.50 கோடிக்குக் குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வரி ஏய்ப்பு நடந்ததா என சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். குக்கருக்கான தொகையை தேர்தல் கணக்கு செலவில் சேர்த்து தினகரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குக்கர் கடை உரிமையாளர், தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள டிடிவி தினகரனை தகுதிநீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்.கே. நகரில் ரூ.1.50 கோடிக்குக் குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வரி ஏய்ப்பு நடந்ததா என சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். குக்கருக்கான தொகையை தேர்தல் கணக்கு செலவில் சேர்த்து தினகரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குக்கர் கடை உரிமையாளர், தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.