ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளத் தடை : மத்திய அரசு முடிவு

டிசம்பர் 15

இனி ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

நாடு முழுவதும் 8 ஆயிரம் தனியார் வேன்கள் மூலம் தினமும் ரூ. 15,000 கோடி ரொக்கப்பணம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன. தவிரக் கூடுதலாக ரூ. 5,000 கோடி, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணம் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறி வைத்து தாக்கி கொள்ளையடிப்பது, வேனுடன் கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நக்சல்கள் பாதித்த பகுதிகளில் இது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், இனி தனியார் வாகனங்கள் இரவில் 9 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதை நிறுத்திட வேண்டும். நக்சல் பாதித்த பகுதிகளில் மாலை 6 மணிக்குள் பணம் நிரப்பிட வேண்டும். ஒரு வேனில் அதிகபட்சமாக ரூ. 5 கோடிக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகள் பொருத்த வேண்டும். இதனை அனைத்து வங்கிகளின் செக்யூரிட்டி வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகளை வகுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...