அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்ட வடமாநிலத் திருடர்கள் கைது

கோவை, டிசம்பர் 15

கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.



கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர். 



அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...