அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்ட வடமாநிலத் திருடர்கள் கைது

கோவை, டிசம்பர் 15

கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.



கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர். 



அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...