ஒகி புயல் பாதிப்புக்குப் பிறகு 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்

டிசம்பர் 14

ஒகி புயலுக்கு பின்னர் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30-ந் தேதி தாக்கிய ‘ஒகி’ புயலால் பெருத்த சேதம் விளைந்தது. இந்த புயலில் சிக்கி கணிசமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீனவர்களின் பிணங்களும் கரை ஒதுங்கி வருகிறது. இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை மாயமானவர்களை தேடும் பணியைத் தொடர்ந்து வருகிறது. பிற மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இப்போது, ஒகி புயலுக்கு பின்னர் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 433 மீனவர்களையும், கேரளாவில் இருந்து 186 மீன்வர்களையும் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது. ஒகி புயலுக்கு பின்னர் மாயமானவர்கள் குறித்து இரு மாநிலங்களும் இறுதி அறிக்கையை கொடுக்க வேண்டியது உள்ளது. வீடு வீடாக சென்று மாயமானவர்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர்தான் மாயமானவர்கள் தொடர்பான இறுதி தகவல் தெரியவரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...