ஜெயலலிதா மரண விவகாரம் : அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

டிசம்பர் 14

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம்  4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை விசாரணை ஆணையம் முன்பு திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் மருத்துவர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, தீபக் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அது தொடர்பான விளக்கங்களை தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். அப்போது, பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் அவர் கூறினார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிந்த பின் அது குறித்து தீபக் கூறியதாவது:-  ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன். சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அனைவரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளேன். என்றார். 

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...