ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த போலீஸ்காரரின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி

டிசம்பர் 14

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.



ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது காவல்துறையினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெரியபாண்டியனின் உடல் தமிழகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இன்று காவல் ஆய்வாளர் உடல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டது. மதியம் 12.20 மணிக்கு அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

விமான நிலையத்தில் பெரியபாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் சாரங்கன், ஜெயராம், சே‌ஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலியின் போது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கையில் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர். 

இதற்காகச் சென்னை விமான நிலையத்தில் 5-வது வாசல் அருகில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 21 துப்பாக்கிகளைக் கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். 

சென்னையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது பூர்வீக வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா மற்றும் 2 மகன்கள் நேற்றிரவே சாலைப்புதூர் கிராமத்திற்குச் சென்று விட்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...