கோவை ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் கைது

கோவை, டிசம்பர் 14

கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் 6 பேரை தமிழக போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையங்களில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் ரூ.26 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்திருந்தார். 

அதன்படி, குற்றப்பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன், காவல் ஆணையர்கள் அண்ணாதுரை, அன்பரசு, சரவணன் ஆகியோரது தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

கொள்ளை சம்பங்கள் நடைபெற்ற ஏ.டி.எம்.மையங்களின் அருகே இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வடமாநில வாலிபர்கள் இந்த கொள்ளையில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இந்த நிலையில், ஏ.டி.எம்.கொள்ளையர்கள் கார் மூலமாக நாமக்கல் மற்றும் சேலம் செல்வது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. 

இன்று காலை நாமக்கல் கீழாம்பூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்று சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்றது. இதனை தொடர்ந்து, அந்த காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 

அப்போது காரில் இருந்த மூன்று பேரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த கிராமத்திற்குள் தப்பியோடினர்.

குட்டி விமானம்

கிராமத்தில் இருந்த சோளைக்காட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க காமிரா பொறுத்தப்பட்ட குட்டிவிமானம் ஒன்றை போலீசார் பறக்கவிட்டனர். தொடர்ந்து கொள்ளையர்கள் மூன்று பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தன.



சேலம்

இதே போல், சேலத்தில் ஒரு மினி லாரி போலீசாரின் வாகனத்தனிக்கைக்கு நிற்காமல் சென்றது. அந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் அதில் இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஏ.டி.எம். கொள்ளையில் சம்மந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்களை இன்று மாலை கோவைக்கு கொண்டுவர இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளைக்கும்பலை பிடித்த தமிழக போலீசாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...