அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் : சி.பி.எஸ்.இ அறிவிப்பு

டிசம்பர் 12

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. 

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கில வழியிலேயே அதிகமானார் எழுதுவதாகவும், பிராந்திய மொழிகளில் குறைவான பேர் எழுதுவதால் இந்தக் கோளாறு நேர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...