டிசம்பர் 12
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காவல்கிணற்றில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஓகி புயலில் வீடு இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பின்னர், மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பின்னர், அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர், அங்குச் சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காவல்கிணற்றில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஓகி புயலில் வீடு இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பின்னர், மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பின்னர், அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர், அங்குச் சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.