சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு, ஆணவக் கொலைகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி : கவுசல்யா பேட்டி


டிசம்பர் 12

ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் என கவுசல்யா தெரிவித்துள்ளார். 

உடுமலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தண்டனை அறிவித்தது. கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், 5 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு பேருக்கு முறையே ஆயுள்தண்டனையும், 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்பு குறித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவுசல்யா,  சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு வரவேற்பு  தெரிவித்துள்ளார்.  மேலும், அவர் பேசுகையில், ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும். இந்தக் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும். மேலும் சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.

 

அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். 3 பேருக்கும் தண்டனை பெற்றுத் தரும் வரை தனது சட்ட போராட்டம் ஓயாது. சாதி, ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். எனக்கும், சங்கரின் குடும்பத்தாருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதி வெறியர்களுக்கு இந்தத் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...