முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ விசாரணை


டிசம்பர் 12

நிலம் ஒதுக்கியதில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக 28 மாதங்கள் பதவி வகித்தார். அப்போது, ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அவருக்கு முன்பு, துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், நிலம் ஒதுக்க மறுத்து உள்ளார். ஆனால், ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது, நிலம் ஒதுக்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று (டிச., 12) மீண்டும் சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...