திருப்பூர், டிசம்பர் 12
தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே என கவுசல்யா தெரிவித்துள்ளார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கான முழுமையான தண்டனைகள் விபரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆணவக் கொலையால் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனது தந்தையானாலும் குற்றவாளி, குற்றவாளியே... இதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே என கவுசல்யா தெரிவித்துள்ளார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கான முழுமையான தண்டனைகள் விபரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆணவக் கொலையால் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனது தந்தையானாலும் குற்றவாளி, குற்றவாளியே... இதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.