திருப்பூர், டிசம்பர் 11:
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்பாட்டம்
செய்தனர்.
மடத்துக்குளத்தில் திருப்பூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் ரூபாய் 74 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனா் எனவும் மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மடத்துக்குளத்தில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மடத்துக்குளத்தில் உள்ள அரசு சா்க்கரை ஆலையை மேம்படுத்த 25 ரூபாய் கோடி ஒதுக்கி அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
அதே போல் பயிா்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைகழித்து வருகின்றனா், பாலுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் 200க்கும் மேற்பட்டோா் கண்டன ஆா்பாட்டம் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்பாட்டம்
செய்தனர்.
மடத்துக்குளத்தில் திருப்பூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் ரூபாய் 74 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனா் எனவும் மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மடத்துக்குளத்தில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மடத்துக்குளத்தில் உள்ள அரசு சா்க்கரை ஆலையை மேம்படுத்த 25 ரூபாய் கோடி ஒதுக்கி அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
அதே போல் பயிா்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைகழித்து வருகின்றனா், பாலுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் 200க்கும் மேற்பட்டோா் கண்டன ஆா்பாட்டம் செய்தனா்.