திருமாவளவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை, டிசம்பர் 11

சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.



பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாகவும், அம்பேத்கர் நினைவு தினமும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த கோயில்களைக் கட்ட வேண்டும் எனப் பேசியதாக செய்திகள் வெளியாகின. 

அவரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆங்காங்கே கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, திருமாவளவனின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயல் எனவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் விசிக தலைவரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். 

இதனைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்தனர். பின்னர், கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜக-வினர், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஈடுபடுவதாகவும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினர். மேலும், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...