பாண்டவர் அணியில் திடீர் விரிசல்: நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா

டிசம்பர் 11

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளில் நடக்கும் மாற்றங்களைவிட நடிகர் சங்கத்தில் நடக்கும் மாற்றங்கள் சற்று அதிகம். நாள்தோறும் பரபரப்பான ஏதாவது ஒரு விஷயங்கள் நடிகர் சங்கத்தில் நடந்துவருகிறது. அந்த வகையில், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர். 

இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. கூட்டத்தைப் பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து நடிகர் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பைக் கோபமாகப் பத்திரிகையாளர் முன்னிலையில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் பொன்வண்ணன், சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விஷாலின் பாண்டவர் அணியிலிருந்த பொன்வண்ணன் திடீரெனப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...