பைக் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலி

கோவை, டிசம்பர் 11

கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது யாசர் அர்பத் (19), இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவஎ  வெள்ளிங்கிரி (17). தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் போத்தனூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை இரு சக்கர வாகனம் மூலம் வீடு திரும்பினர்.

இவர்களது வாகனம் வடகோவையை அடுத்த பாரதி பார்க் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக,  போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...