குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் பீதி


டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தனியாருக்கும் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனத்துறையினருக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் காட்டெருமைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, தனியார் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில் பசுமையான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தப் புற்களை உண்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகப் படை எடுக்கத் துவங்கியுள்ளன. பர்லியார் பகுதியில் 2 காட்டுயானைகளும், ‌கோழிக்கரை கிராமத்தில் ஒற்றை யானையும், கே.என்.ஆர் பகுதியில் 3 காட்டுயானைகளும் முகாமிட்டுள்ளன. இந்தக் காட்டுயானைகள் எந்த நேரத்திலும் சாலைக்கு வரக்கூடும் என்பதால் வனத்து‌றையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஒட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...