தமிழுக்கு வந்த சோதனை.! : கல்வெட்டை சாக்கடை மூடியாக பயன்படுத்தும் கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர்.9 :

கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம். 

கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 

மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். 

இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...