தமிழுக்கு வந்த சோதனை.! : கல்வெட்டை சாக்கடை மூடியாக பயன்படுத்தும் கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர்.9 :

கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம். 

கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 

மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். 

இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...