ஜெ., கைரேகை குறித்த வழக்கை விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

டிசம்பர் 8

தேர்தல் ஆணையப் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தது தொடர்பான வழக்கை விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையைத் தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தேவைப்பட்டால் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். 

இதனிடையே, ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்க தடை விதிக்கக் கோரி ஏ.கே போஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களைச் சோதனை செய்யவும், இந்த வழக்கை விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சரவணன் உள்பட வழக்கில் தொடர்புடைய 28 பேரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...