பிரீமியர் பேட்மிட்டன் லீக் போட்டி டிச.19-யில் துவக்கம்


கோவை, டிசம்பர் 8

பிரீமியர் பேட்மிட்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் 2018 ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது என சென்னை ஸ்மேஷர்ஸ் அணி உரிமையாளரும் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த்தின் மகனும் ஆகிய வி. விஜயபிரபாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-



பிரீமியர் லீக் போட்டிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது கோவை வந்துள்ளேன். 

இந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை தில்லி, அசாம், அகமதாபாத் மற்றும் லக்னோவைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 5 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோர் ஒருவர் என வீரர்கள் இடம்பெறுவர். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 26 வீரர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற கரோலினா மரியாவும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இதில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் சார்பில் பி.வி.சிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றியும் பெற்றார்.

இந்த ஆண்டு சென்னையில் ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணி சார்பாக பி.வி.சிந்து லக்னோ அணியின் சாய்னா நெஹ்வாலை எதிர்த்து விளையாடவுள்ளார். குறிப்பாக வழக்கத்தைப் போன்று இப்போட்டி 21 புள்ளிகளில் இருந்து மாற்றப்பட்டு 15 புள்ளிகள் என மொத்தம் மூன்று கட்டமாக நடைபெறும்.



இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 3 கோடி முதல் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.5 கோடி ரூபாயும், அரை இறுதியில் பங்கேற்கும் இரு அணிக்கு தலா 75 லட்சம் ரூபாயும் என மொத்தம் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...