தனியார் பேருந்துகளில் பாடல் மற்றும் திரைப்படங்களை திரையிடத் தடை - ஜன.,1 முதல் அமலாகிறது

டிசம்பர் 8

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் பாடல் மற்றும் திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைதூரப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக, தனியார் பேருந்துகளைத் தான் அதிகம் விரும்புகின்றனர். தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்களுக்கு தனியார் பேருந்துகளின் மீது ஒரு மோகம் உள்ளது.

அதற்கு காரணம் விரைவாக செல்வது, பயணத்தின் போது படம் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதால் பயணக் களைப்பின்றி செல்லலாம் என்ற எண்ணம்தான். ஏனென்றால் அரசு பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி, தனியார் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது, பாடல்களை கேட்பது போன்ற வசதிகளை அனுபவிக்க முடியாது.

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் , அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சுமார் 7 ஆயிரம் பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் நீக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...