ஜெயலலிதா மரணம் வழக்கு : விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த மருத்துவர்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நீதிபதி முன்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.  தீபா கணவர் மாதவன், திமுக வழக்கறிஞர் சரவணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் நிர்மலா, ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயணபாபு ஆகிய இருவரும் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், நீரிழிவு நிபுணர் தர்மராஜ் மற்றும் ஜெயலலிதா மரண படுக்கையில் இருந்தபோது கைரேகை வாங்கிய மருத்துவர் பாலாஜி ஆகிய இருவரும் இன்று ஆஜராகினர். நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் தர்மராஜ் விளக்கம் அளித்தார். அதேபோல, கைரேகை குறித்து மருத்துவர் பாலாஜியிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பின்னர், ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை, உணவு மற்றும் சந்திப்பு ஆவணங்களையும் மருத்துவர்கள் தாக்கல் செய்தனர். இதுவரையில் அரசு மருத்துவர்கள் 6 பேரிடமும் தனிநபர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...