பாதுகாப்பு வேண்டி கோவையில் காதல் ஜோடி தஞ்சம்

கோவை, டிசம்பர் 8

பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். 

அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.



இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். 

அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...