கோவை, டிசம்பர் 6
ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளால் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்குக் கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியப் பாதையாக ஆவாரம்பாளையம் சாலை கருதப்படுகிறது. நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். கணபதி - ஆவாரம்பாளையம் இடையிலான சாலையில் ரயில்பாதையும் இருக்கிறது. ரயில் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும்.
இந்த நிலையில், ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை (டிச.,07) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே, பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், அதுவரை மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளால் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்குக் கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியப் பாதையாக ஆவாரம்பாளையம் சாலை கருதப்படுகிறது. நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். கணபதி - ஆவாரம்பாளையம் இடையிலான சாலையில் ரயில்பாதையும் இருக்கிறது. ரயில் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும்.
இந்த நிலையில், ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை (டிச.,07) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே, பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், அதுவரை மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.