கோவையில் "MSME EXPO -2017" டிச.15-யில் துவக்கம்

கோவை, டிசம்பர் 5

எம்.எஸ்.எம்.இ - டிஐ, கோயம்புத்தூர் சிட்கோ இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட் உற்பத்தியாளர் சங்கம் (கொடிசியா) உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை நடத்த உள்ளன.

எம்.எஸ்.எம்.இ பிரிவில் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா திகழும் வகையில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப்  இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ZERO DEFECT ZERO EFFECT போன்ற திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த எம்.எஸ்.எம்.இ  துறையானது அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கணிசமாக பங்களிப்பு செய்து வருகிறது.

அதன்படி, எம்.எஸ்.எம்.இ -டிஐ, கொடிசியா உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

MSME-EXPO 2017 மூலம் இந்தியாவின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பல பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 80-க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ  சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் எந்திர வசதிகள் மற்றும் 20 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன. புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.

மேலும், இலவச கருத்தரங்கைத் தவிர இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...