கோவை, டிசம்பர் 5
கோவையில் பொறியியல் பட்டாதாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
கோவில்பாளையத்தை அடுத்த கோட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அரசு பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முகேஷ் (26). பொறியியல் பட்டதாரியான இவர் கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணி முடித்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் , மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேஷ்-ன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.