தொப்பி சின்னம் வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் கேவியட் மனுத் தாக்கல்

டிசம்பர் 05

தொப்பி சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்கக்கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...