ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கோவை மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 05

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த புதிய சிலைகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என யாரும் செல்லாத நிலையில், இன்று முதல் முறையாகக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் இந்த புதிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...