புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கைவிட வலியுறுத்தல்

கோவை, டிசம்பர் 4

கோவையில் இயங்கி வரும் புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி, புலி வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை மாவட்ட சமூக மற்றும் வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வலுவலகத்தை இடமாற்றம் செய்வதைக் கைவிடக்கோரி, புலி வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் களக்காடு முண்டாந்துறை தவிர்த்து, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய 3 புலிகள் காப்பகங்கள் கோவை சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள நிலையில், முறையான காரணமின்றி அவ்வலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்வது அவசியமற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும், புலிகள் திட்ட முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் தொடர்ந்து கோவையில் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...