குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம்


டிசம்பர் 4

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.



மலை மாவட்டமான நீலகிரியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் மையப்பகுதிகளிலும் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காட்டெருமைகளால், விபத்துக்குள்ளாகி பலர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முனியாண்டி (58) என்பவர் வீட்டு வாசலில் காட்டு எருமை இருப்பதை கவனிக்காமல் வெளியே வந்துள்ளார். அப்போது, அவரை காட்டெருமை தூக்கி வீசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனியாண்டியின் தலையில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி செய்யப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 14 தையல் போடப்பட்டது. காட்டெருமைகளின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு வலியுறுத்தினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...