தாமதமாக வந்த வால்பாறை பேருந்து- பயணிகள் அவதி


கோவை, டிசம்பர் 4

வால்பாறை செல்லும் பேருந்து இரவு நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 1.30 மணியளவில் வால்பாறைக்கு அரசுப்பேருந்து இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் 3ம் தேதியன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு அதிமுக தொண்டர்களை அழைத்து வர பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டன. இதில், வால்பாறை பேருந்தும் ஒன்று.

இந்நிலையில், இரவு ஒரு மணியளவில் வால்பாறை செல்லவேண்டிய பேருந்து சேலத்திற்கு சென்றிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு காந்திபுரம் வந்தடையவில்லை. பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. 

பின், தாமதமாக 3 மணியாளவிலேயே பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதனால் இந்த பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்த வால்பாறை பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து, வால்பாறை செல்லவிருந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், "ஒரு வயது குழந்தையுடன் நீண்ட நேரமாக பேருந்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கமாக ஒரு மணியளவில் வால்பாறைக்கு புறப்படவேண்டிய பேருந்து இன்னும் இங்கு வந்தடையவில்லை.

சேலம் சென்றிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பேருந்தில் சென்றால் தான் காலை குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியும். மாற்றுப் பேருந்தும் இயக்கப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரி கூறுகையில், "முதலமைச்சர் வருகையையொட்டி பெரும்பாலான பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டுள்ளன. தற்போது பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், வால்பாறை செல்ல மாற்றுப்பேருந்தை இயக்க முடியாது. ஊசிமுனை வளைவுகள் அதிகமுள்ள அப்பகுதிக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் தேவை. அதனால், சேலம் சென்றுள்ள வால்பாறை பேருந்து வந்தால் மட்டுமே வால்பாறைக்கு பேருந்து இயக்க முடியும்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...