அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

கோவை, டிசம்பர் 4

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் சிறுநீர், மலம் கழிக்க ரூ. 1 மற்றும் குளிக்க ரூ. 3 என வசூலிக்க வேண்டும் என அதன் அருகிலேயே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபரோ மாநகராட்சி நிர்ணயித்துள்ள விலை பட்டியலை ஒரு அட்டையினைக் கொண்டு மறைத்து, அதற்கு மாற்றாக அதிகப்படியான தொகையை வசூலித்து வருகிறார். அதாவது, சிறுநீர் கழிக்க மட்டும் 5 ரூபாய் இங்கு வசூல் செய்யப்படுகிறது.



இதுகுறித்து, அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நபரிடம் கேள்வியெழுப்புகையில், "மாதம் 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகமா அதனை செலுத்தும். இவ்வாறு அதிகத் தொகை வசூலித்தால் மட்டுமே அதனை செலுத்த முடியும். வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் சாலையோரம் சென்று சிறுநீர் கழித்துக் கொள்ளுங்கள்" என்றார் கடும் கோபத்துடன்.

வாரம் தவறாமல் "அதிக தொகை வசூலித்த கட்டணக் கழிப்பிட குத்தகைதாரர் மீது நடவடிக்கை" என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...