கோவை, டிசம்பர் 3
ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அக்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் திரு. துரைமுருகன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றார்.
இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் தானே மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அக்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் திரு. துரைமுருகன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றார்.
இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் தானே மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.