எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர்


கோவையில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு பணிகளுக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர். 

அ.தி.மு.க. சார்பில் நாளை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

நிழகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்பு பணிகளுக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8  மாவட்டங்களில் இருந்தும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு ஊர்காவல் படை, ஆயுதப்படை,ஆகிய துறைகளைச் சேர்ந்த போலீசாரும் இன்று கோவை வந்தடைந்தனர். 

நிகழ்ச்சி  பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார்  கோவை வந்துள்ள நிலையில் அவர்களை தங்க வைப்பதற்காக 20 தனியார் திருமணமண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...