கோவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு

கோவை, நவம்பர் 30

கோவை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு "அரசியல் நாகரீகத்துக்காக"  நிகழ்ந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. பிரதமர் மோடி, நீயூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்தத் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல், தோப்புக்கரணம் போடும் அரசாக இருக்கின்றது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருகின்றது.

மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம். 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த ரகுவின் மரணம் வருத்தம் அளிக்கின்றது. இந்த உயிரிழப்பிற்கு அரசேக் காரணம். ஆர்.கே. நகர் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டினை வரும் 3-ம் தேதி காலை தெரிவிப்பேன். என்றார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் சென்ற வைகோ, திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சிறிது நேரம் பேசினார். பிறகு, இந்தச் சந்திப்பு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய அவர், அரசியல் நாகரீகத்துக்காக  இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதில் தவறில்லை. விமான நிலையங்களில் சந்திப்பு நடப்பது வழக்கமானது. மேலும், தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...