இரட்டை இலை விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

நவம்பர் 30

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடினர். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. இதனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி, எடப்படி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது. இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குச் சாதகமான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்டங்களாக விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டிடிவி தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...