உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றன, மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் மெத்தனம்: பாஜக தேசிய செயலாளர் கடும் கண்டனம்

கோவை, நவம்பர் 29

ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை என்று தன் கண்டனத்தை பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கூறியதாவது:



 தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் கழிவறை திட்டம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் உதவிகளை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். கடந்த ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இந்த லஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. சென்னை பாம்பன்சாமி திருக்கோவிலுக்கு பல ஆண்டுகளாகத் தீபம் காட்டவில்லை. இதனால், சென்னையில் வெள்ளம் வந்து நாசமாகப் போகின்றது. சென்னை பாம்பன்சாமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் கோவிலில் பூஜை ஏன் நிறுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை, துப்புக்கெட்ட நியாயமில்லாத துறையாக இருக்கின்றது. அர்ச்சகர்களுக்குச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாத போது செயல் அலுவலர்களுக்கு மட்டும் எதற்குச் சம்பளம் ?. 

மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.  மாணவி ஹதியா விவகாரம் பற்றி கருத்துச் சொல்லவே விரும்பவில்லை. கன்னியாஸ்திரிகளை பற்றி யாரும் பேசாத போது, ஈசா மையத்தைப் பற்றி யாரும் பேச தேவையில்லை. கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார் இதை ஏன் ஊடகங்கள் பேசவில்லை.

கடலூரில் ஆனந்த என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு விட்டுத் தப்பி விட்டதாகத் தகவல் வருகின்றது. ஆனால், காவல்நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...