WHO KILLED RAGU? என்ற வாக்கியத்தை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் விசாரணை



கோவை, நவம்பர் 28

"WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று அதிகாலை பீளமேடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிமுக-வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயில் தான் காரணம் என்று திமுக-வினரும் பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டிவந்த நிலையில், ஒரு வழிப்பாதையில் பயணித்த லாரியே விபத்துக்குக் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழ்நிலையில், ரகுபதி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகில் "WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சிலர் எழுதிச்சென்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் வருண் (26) மற்றும் பிரசாந்த் (27) என்ற இரு வாலிபர்கள் அந்த வாக்கியத்தினை எழுதியதாகச் சந்தேகித்து நேற்று இரவு இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலையும் பீளமேடு காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சாலையில் வாக்கியம் எழுதியது யார்? எதற்காக எழுதினார்கள்? என்பது தொடர்பாக மட்டுமே விசாரிக்கிறோம்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இருவரும் சின்னியம்பாளையம் பகுதியில் ரகுபதி வீட்டின் அருகே வசிக்கும் பட்டதாரிகள்.

ரகுபதி உயிரிழந்த ஆதங்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் என்றார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...