நல்லவர்களுடன் கூட்டணி அமைப்பேன் - நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு


நவம்பர் 26

அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை என்றும், ஆகையால், நல்லவர்களுடன் கூட்டணி அமைப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தில்லியில் சனிக்கிழமை நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வரக் காரணமே எங்கும் மலிந்து கிடக்கும் ஊழலைத் துடைத்து எறிய வேண்டும் என்பதுதான். தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். அரசியலில் என்னை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. மாற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மாற்றத்தை விரும்புபவர்கள் என் பக்கம் வந்து நிற்பார்கள். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலோ, சினிமா தயாரிப்பு போன்ற தொழிலோ அல்ல. அதனால் அரசியலில் தோல்வி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது.

விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால், தமிழகத்தின் நலன் கருதி யாருடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எந்த வகையிலான தீவிரவாதமானாலும், அதை நிச்சயம் ஆதரிக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...