கோவை, நவம்பர் 24
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தகூட்டத்தில், நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோவையில் உள்ள மத்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடக் கூடாது எனக் கோரியும் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் மூலம் வழங்கப்படும் விளக்கம் தமிழில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி , வேளாண்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் தொடர்சியாக அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய கூட்ட பொருப்பாளர் வேளான் இணை இயக்குனர் மீதும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோஷமிட்டனர். வருவாய் அலுவலர் முன்னிலையில் விவசாயிகள் முழக்க மிட்டதால் குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தகூட்டத்தில், நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோவையில் உள்ள மத்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடக் கூடாது எனக் கோரியும் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் மூலம் வழங்கப்படும் விளக்கம் தமிழில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி , வேளாண்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் தொடர்சியாக அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய கூட்ட பொருப்பாளர் வேளான் இணை இயக்குனர் மீதும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோஷமிட்டனர். வருவாய் அலுவலர் முன்னிலையில் விவசாயிகள் முழக்க மிட்டதால் குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.