விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 24

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தகூட்டத்தில், நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோவையில் உள்ள மத்திய கரும்பு  இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடக் கூடாது எனக் கோரியும் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் மூலம் வழங்கப்படும்  விளக்கம் தமிழில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி , வேளாண்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் தொடர்சியாக அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய கூட்ட பொருப்பாளர் வேளான் இணை இயக்குனர் மீதும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோஷமிட்டனர். வருவாய் அலுவலர் முன்னிலையில் விவசாயிகள் முழக்க மிட்டதால்  குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...